Wednesday, May 27, 2020

வருக வருக

உள்ளுக்குள் உருகிடும் தமிழ்ப்பனியை 
ஊற்றி உறையிடும் தமிழ்ப்பணியை
எவ்விதம் செய்வது தெரியவில்லை
எவ்விடம் சேர்ப்பது புரியவில்லை...

வார்த்தைகள் தினந்தினம் பூக்கிறது 
வாய்ப்புகள் எத்தினம் கேட்கிறது!
ஆயிரம் வாசல் இருக்கிறது -அட தச
திறவுகோல் எங்கோ கிடக்கிறது!

தாய்வழி வந்த மரபல்லவா-இது 
தாய்மொழி தந்த வரமல்லவா? 
வார்த்தைகள் கோர்ப்பது சுகமல்லவா
வாசகன் ரசிப்பது விருதல்லவா? 

பூட்டி வைப்பதில் பலனுமில்லை 
பூட்டுதல் தமிழுக்கு பலனுமில்லை
வருவதை வாரி இறைக்கின்றேன்
தருவது எதுவோ ஏற்கின்றேன்!

இணைய வழியை தேடி நின்றேன்
இணையவழியை தேடி வந்தேன்.

இனி சந்திப்போம் தமிழோடு...

No comments:

Post a Comment