Friday, July 15, 2022

விவசாயி படும் பாடு

பாடுபட்டா பலன் கிடைக்கும் 

பெரியவங்க சொன்னாங்க- நான் படுற பாட்டை பாத்துப்புட்டு

வாயடைச்சு நின்னாங்க...


நட்ட பயிரு வெளயலயே 

நாளுக்கு நாள் காயுது; தினம் சாயுது -தப்பி

வெளஞ்சதுக்கும் 

விலையில்லையே

விதியை எண்ணி நோகுது; சனம் சாகுது!

             ‌‌                                 (பாடு பட்டா)

புண்ணாக்கு போதலன்னு 

காளை மாடு முட்டுது; கொம்பு குத்துது -ஒரு 

புடவை வாங்க வக்கில்லன்னு 

பொஞ்சாதி திட்டுது! சும்மா கத்துது!

             ‌‌                                 (பாடு பட்டா)

வாரம் வாரம் வாசலுல 

குழுவு பொண்டுக கூடுது; சத்தம் போடுது- பணம் 

வாங்கும் போது இனிச்சுதானு 

நாக்கைப் புடுங்க கேக்குது; ஊர் பாக்குது! 

             ‌‌                                 (பாடு பட்டா)

சேட்டு கடை தாண்டும்போது 

சின்னப் பொண்ணு ஞாபகம்; கடை போனதும்- அவ 

தோட்டுத் தொங்கல் வட்டி கேட்டு 

மீட்டுத் தர தாமதம்; இன்னும் தாமதம்! 

             ‌‌                                 (பாடு பட்டா)

வய வரப்பு களத்துலயே

எங்க பொழப்பு முடியுது; புள்ள தொடருது- அட 

எந்தக் காலம் சூரியனும் 

ஏழை வீட்டில் விடியுது? ;ஒளி படருது?.

             ‌‌                                 (பாடு பட்டா)

-வரத.வசந்தராஜன்

  நன்னிலம்.

No comments:

Post a Comment