Friday, July 15, 2022

ஹிப் ஹாப் வடிவில் ஒரு முயற்சி

 நண்பா....

நீ வா வீதிக்கு

நாங்கள் சொல்லும்‌ தேதிக்கு!

சட்டம் இங்கே யாருக்கு?- எனச் 

கேட்கும் மறியல் போருக்கு!


பதிவுகள் மட்டும் போதுமா?-நீ களத்துக்கு வந்தால் பாவமா? 

எதிர்த்து கேள்வி கேட்காமல் 

சட்டையை பிடித்துக் குலுக்காமல் 

பதில் தருமா? மனம் வருமா? 

மயிலே மயிலே என்றால் 

இறகிடுமா? சரிப்படுமா? 


இதுவரை இங்கே இருப்பது- அதில் எதுதான் தானாய் கிடைத்தது?

மூடிய கதவுகள் தெறிக்கும்-உன்

முஷ்டியில்  மோது பிளக்கும்

மடை திறக்கும்! விடை பிறக்கும்!

விழித்தது இளையோர் கூட்டம்

இனிதூங்குமா? புவிதாங்குமா?


இனியும் என்ன யோசனை?- அட 

எத்தனை நாளிந்த வேதனை?

ஒரு சிலருக்கு நாடா?- நாம் 

ஒன்றாய் இணைவோம் வாடா! 

படை வெல்லும்! பகை கொல்லும்!

மேடுகள் பள்ளம் நிரப்ப

எடு ஆயுதம்! அறிவாயுதம்?


எல்லாம் இறைவன் விதித்தது- என 

எவன்தான் சொல்லிக் கொடுத்தது?

வேதங்கள் சொல்வது மூடம்- நாம் 

படித்தோம் இயங்கியல் பாடம்!

வரும் நேரம்! நிலைமாறும்! 

நெருக்கடி இன்னும் முற்றும் 

போர் மூளும்! பொதுவாகும்! 


-வரத.வசந்தராஜன்

No comments:

Post a Comment