பெண்:
ஆத்துமீனை பாக்கும்போது அடிமனசில் நூறுஆசை
சேத்துமடை கெளுத்தியாட்டம் குத்துகிற மாமன்மீசை
சோத்துப்பானை கரியைப்போல சொக்கும்நெறம் அமாவாசை
நாத்துவீச வாரீகளா நடவுமறந்து நானும்பேச?
செருப்புமறந்த பாதத்துல சிணுங்குதடி பூங்கொலுசு
கருத்தநெறம் மாறட்டுமே செவத்தபுள்ள நீயுரசு
கழுத்துமணி நுனியிலதான் கட்டழகே உன்மவுசு!
பெண்:
வெவரமான ஆளுநானு விவகாரம் பேசாதீக
விலைபேசி வம்பைவாங்கி வில்லங்கம் சேக்காதீக
தாலிகட்டும் முன்னாடியே கேலிபேச கூடாதுங்க
வேலிபோட்டு விரட்டினாலும் வெள்ளாடு ஓடாதுங்க!
ஆண்:
அத்தைமக முறையிருக்கு ஆனாலும் பயமிருக்கு
ஆடிப்பட்டம் வெளஞ்சிருக்கு தைபொறந்தா வழியிருக்கு
மத்தாட்டம் கடையத்தானா மவராசி விழியிருக்கு
பித்தாட்டம் அலையுறேன்டி போகலயே மனக்கிறுக்கு!
பெண்:
பருத்தியெடுக்கும் வயலுக்குள்ள வெடிக்குதய்யா புரளியொன்னு
பனைமட்டை கருக்கைப்போல அறுக்குதய்யா ஊருகண்ணு
நெனவுதெரிஞ்ச நாள்முதலா உனக்காக வாழும்பொண்ணு
கனவுகண்டு காத்துகெடக்கேன் கைபிடிக்க வரணுமின்னு!
ஆண்:
விண்ணைவிட்டு வெள்ளிநிலா மறைஞ்சுபோகும் ஆனாலும்
தென்னைபட்டு கூடுவிட்டு கிளிபறந்து போனாலும்
உன்னைவிட்டு நான்பிரிஞ்சு உசிருவளர்க்க மாட்டேன்டி
தண்ணிவிட்டு மீனுவாழ்ந்தா தங்கமேநீ காட்டேன்டி!
இருவரும்:
விதைநெல்லு சாட்சிவெச்சு வெத்தலையும் பாக்குவெச்சு
ஊரெல்லாம் கூட்டிவெச்சு ஒருநாளு பாத்துவெச்சு
நீயும்நானும் சேரப்போறோம் நெனச்சபடி வாழப்போறோம்
பாயும்தல காணிபோல பிரியாம இருக்கப்போறோம்!
வரத.வசந்தராஜன்
ஆத்துமீனை பாக்கும்போது அடிமனசில் நூறுஆசை
சேத்துமடை கெளுத்தியாட்டம் குத்துகிற மாமன்மீசை
சோத்துப்பானை கரியைப்போல சொக்கும்நெறம் அமாவாசை
நாத்துவீச வாரீகளா நடவுமறந்து நானும்பேச?
ஆண்:
வரப்புமேல நீநடந்தா வழுக்குதடி என் மனசுசெருப்புமறந்த பாதத்துல சிணுங்குதடி பூங்கொலுசு
கருத்தநெறம் மாறட்டுமே செவத்தபுள்ள நீயுரசு
கழுத்துமணி நுனியிலதான் கட்டழகே உன்மவுசு!
பெண்:
வெவரமான ஆளுநானு விவகாரம் பேசாதீக
விலைபேசி வம்பைவாங்கி வில்லங்கம் சேக்காதீக
தாலிகட்டும் முன்னாடியே கேலிபேச கூடாதுங்க
வேலிபோட்டு விரட்டினாலும் வெள்ளாடு ஓடாதுங்க!
ஆண்:
அத்தைமக முறையிருக்கு ஆனாலும் பயமிருக்கு
ஆடிப்பட்டம் வெளஞ்சிருக்கு தைபொறந்தா வழியிருக்கு
மத்தாட்டம் கடையத்தானா மவராசி விழியிருக்கு
பித்தாட்டம் அலையுறேன்டி போகலயே மனக்கிறுக்கு!
பெண்:
பருத்தியெடுக்கும் வயலுக்குள்ள வெடிக்குதய்யா புரளியொன்னு
பனைமட்டை கருக்கைப்போல அறுக்குதய்யா ஊருகண்ணு
நெனவுதெரிஞ்ச நாள்முதலா உனக்காக வாழும்பொண்ணு
கனவுகண்டு காத்துகெடக்கேன் கைபிடிக்க வரணுமின்னு!
ஆண்:
விண்ணைவிட்டு வெள்ளிநிலா மறைஞ்சுபோகும் ஆனாலும்
தென்னைபட்டு கூடுவிட்டு கிளிபறந்து போனாலும்
உன்னைவிட்டு நான்பிரிஞ்சு உசிருவளர்க்க மாட்டேன்டி
தண்ணிவிட்டு மீனுவாழ்ந்தா தங்கமேநீ காட்டேன்டி!
இருவரும்:
விதைநெல்லு சாட்சிவெச்சு வெத்தலையும் பாக்குவெச்சு
ஊரெல்லாம் கூட்டிவெச்சு ஒருநாளு பாத்துவெச்சு
நீயும்நானும் சேரப்போறோம் நெனச்சபடி வாழப்போறோம்
பாயும்தல காணிபோல பிரியாம இருக்கப்போறோம்!
வரத.வசந்தராஜன்
No comments:
Post a Comment