காரம் தின்ன கோழியொன்னு கொக்கரிக்குது...
காட்டுநரி பயந்து போயி நமஸ்கரிக்குது...
அகலமாக நெஞ்சை இன்னும் விஸ்தரிக்குது-அதன்
வீரமெல்லாம் கோழிக் குஞ்சை எச்சரிக்குது!
பாயும்புலி வேஷமெல்லாம் வெறும் பேச்சுதான்
பயம்மறைக்க பூசுகிற முகப்பூச்சுதான்!
எலும்பும் தோலுமாயிருந்தா ஆளை மிரட்டுது
எக்குத்தப்பா ஆகுமுன்னா வாலை சுருட்டுது!
கெழட்டுசிங்கம் கொழுப்பெடுத்து வாயைப் பொளக்குது
குருட்டுப்பூனை கருவாட்டை படி யளக்குது!
வறட்டுவீரம் பேசுகிற வானர பாணி- சும்மா
இருட்டுநேரம் உருட்டுகிற பழம் பெருச்சாளி!
வெளிப்படையா மிரட்டுதுங்க வெள்ளை மாளிகை
வேடிக்கைதான் பாக்குதுங்க ராமன் பாதுகை!
ஆர்எஸ்எஸ் இயக்குதா அமெரிக்கா இயக்குதா...?
அம்பத்தாறு இஞ்சுக்குள்ள தேசப்பற்று இருக்குதா?
கண்டனங்கள் இந்நேரம் முழங்கி இருக்கணும்
கண்டம்தாண்டி இந்தியாவின் குரல் ஒலிக்கணும்!
ஐநாவில் அமெரிக்கா கையக் கட்டணும்
அப்புறந்தான் விளக்கேத்தி கையத் கட்டணும்!
-வரத.வசந்தராஜன்
No comments:
Post a Comment