Tuesday, September 8, 2020

அம்பத்தாறு இஞ்ச்

 

தரையில வாத்தை ம'டக்'குன
ஆளு
தண்ணியில் முதலையை அ'டக்'குன ஆளு...
பொருளாதாரத்தை மு'டக்'குன ஆளு
பொறுத்தது போதும் ப'டக்'குனு கேளு!

அது யாரு அது யாரு? தெரியுமா?
அவர் பேரு சொல்லாம புரியுமா?

அம்பத்தாறு இஞ்சுக்கு
அகலமான நெஞ்சுக்கு
அஞ்சுகாசு அளவுக்கு
மச்சமொன்னு இருக்குதடா மச்சான் -அதானி
கச்சிதமா அளந்து தானே வெச்சான்!
    (அது யாரு )

வாயில சுட்ட வடையில
லாபம் பாக்கும் கடையில
டீ ஆத்துன கப்சா ரொம்ப ஹிட்டாச்சு -உண்மை
தெரிஞ்ச பின்னே ஏழைத்தாயை தொட்டாச்சு!   ‌‌    (அது யாரு )

கலர் கலரா உடையில
மாடல் போல நடையில
மாட்டிகிட்டு போஸ் கொடுக்கும் எளிமையை -பாத்து
பதறுதடா ஜவுளிக் கடை பொம்மையே!          (அது யாரு )

ஏத்தி விட்ட ஏணியை
எட்டி உதைக்கும் பாணிடா
பிள்ளையாரா பிடிச்சாலும் சாணி தான் -அவரு
பிடுங்குனது தேவையில்லா ஆணி தான்!           (அது யாரு )

சிசி டிவி காமிரா
பார்த்துப் புட்டா பாமரா
போனவேலை மறந்து போகும் பாரு -சேர்ந்து
செல்ஃபி எடுக்க சிலையா நிப் பாரு!
                        (அது யாரு )
-வரத.வசந்தராஜன்
  நன்னிலம்

No comments:

Post a Comment