காரட்டு நெறத்தழகி
கத்தரிப்பூ சிரிப்பழகி
சாரட்டு வண்டி பூட்டி வாரேன்டி- உன்னை
சம்மந்தம் பேசத் தான் போறேன்டி!
பூசணிக்காய் முகத்தழகி
புளியம்பிஞ்சு உதட்டழகி
யோசனைக்கு காரணம் எதுதான்டி- நான்
யோக்கியந்தான் சந்தேகம் உனக்கேன்டி!
கன்னத்தில் தக்காளி
கண்ணுக்குள் குடைமிளகாய்
எண்ணத்தில் நிறைஞ்சவளே நீதாண்டி- உன்னை
எப்படியும் மணமுடிக்கப் போறேன்டி!
பீர்க்கங்காய் கழுத்தழகி
பீட்ரூட்டு மாரழகி
ஏக்கத்தை தீர்க்கத்தான் வாயேன்டி- உன்
இதயத்தில் இடமொன்னு தாயேன்டி!
வெண்டைக்காய் விரலழகி
வெள்ளரிக்காய் கையழகி
சண்டைக்கு இழுக்காதே பாவன்டி-நீ
சாடையில சொல்லிபுட்டா பாய்வேன்டி!
சுரைக்காய் இடுப்பழகி
சௌசௌ மடிப்பழகி
முறைச்சா நான் என்ன ஆவேன்டி- உன்னை
மறந்தா மனசுக்குள் சாவேன்டி!
வாழைத்தண்டு காலழகி
வாய்பிளக்கும் பேரழகி
ஏழைக்கேத்த எள்ளுருண்டை நீதான்டி- உன்னை
எஜமானி ஆக்கத்தான் போறேன்டி!
-வரத.வசந்தராஜன்
நன்னிலம்
No comments:
Post a Comment